Skip to main content

Featured

Section 302 IPC Bare Act Explained in Tamil: Punishment, Rarest of Rare, Case Laws | Judiciary Notes

Dear Law Aspirants, Welcome to Lawviasnippets.

July 27 : Birthdays of Kalam , Tamil Poets + Korea War | This Day in History

July 27 is remembered for the birth of great Tamil Poets and the death anniversary of Dr.A.P.J. Abdul Kalam also the end of Korea War. Let's see the details...


Kavimani Desigavinayagam Pillai - Renowned Tamil Poet

தேசிக விநாயகம் பிள்ளை - Kavimani Desigavinayagam Pillai - Renowned Tamil Poet :

✒️Kavimani Desigavinayagam Pillai, one of the renaissance poets of Tamil Nadu, was born on 27 July 1876 in Theroor, Kanyakumari district. He was the first to write a series of songs for children in Tamil. In 1940 he was awarded the title of 'Kavimani' by Tamilvel Umamagesvaran Pillai at Pachaiyappan College, Chennai. "Malarum Malayum," "Asia Jyoti," "Umargayyam Songs," "Alagammai Asiriya Vritham," "Kathar Pirantha kathai," "Kuzhandhai Selvam" are notable among his works. Kavimani Desigavinayakam Pillai, an incomparable Tamil Poet, passed away in 1954.

  • தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.

  • இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி" என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார்.

  • மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

  • இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 26ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Kavimani Desigavinayagam Pillai Collections.


சோமசுந்தர பாரதியார் - Somasundara Bharathiar - Tamil Researcher - Writer - Professor - Lawyer :

✒️Freedom fighter and great Tamil scholar novelist Somasundara Bharathiyar was born on 27th July 1879 at Ettayapuram in Thoothukudi district. His birth name was Sathyananda Somasundaran. He was a follower of Gandhiji in non-cooperation movement and abolition of untouchability. He worked as a lawyer from 1905 to 1933. He has written more than a hundred articles on Tamil grammar literature, politics, history, Tamil civilization and culture. In appreciation of his Tamil talent, the EzhaNadu Tamil Pulavar Mandram awarded him the title of 'Novelist'. Novelist Somasundara Bharatiyar, who contributed to Tamil and the Tamil community, passed away on 14th December 1959.
  • விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன்.

  • இவர் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். 1905ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.

  • தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது தமிழ் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டு தமிழ்ப்புலவர் மன்றம் 'நாவலர்" என்ற பட்டத்தை வழங்கியது.

  • தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 1959ஆம் ஆண்டு டிசம்பர் 14ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் - Dr. Abdul Kalam : 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஏவுகணை நாயகன் டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைந்தார் - On July 27, 2015, Dr.Abdul Kalam, India's 11th President (2002 to 2007) and Indian scientist who played a leading role in the development of India’s missile and nuclear weapons programs, was passed away.

👉Click here to know more about A.P.J.

👉Click here to buy Abdul Kalam Collections.


🌟2016ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழகக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார் - On July 27, 2016, Tamil Nadu's Poet Gnanakoothan passed away.

👉Click here to buy Gnanakoothan Collections.


🌟1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்ட ஜான் டால்ட்டன் மறைந்தார் - John Dalton, who published the first list of atomic weights, died on July 27, 1844.


🌟1907ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழக எழுத்தாளர் மௌனி பிறந்தார் - Tamil Nadu's Fiction Writer Mouni was born on 27th July 1907.

👉Click here to buy Mouni Collections.


🌟1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது - On July 27, 1953, the war between South Korea and North Korea ended.


✒️ I hope you may have learned little things about the following ; 

Kavimani Desigavinayagam Pillai, Renowned Tamil Poet - Somasundara Bharathiar, Tamil Researcher, Professor, Lawyer & Writer - Dr.A.P.J.Abdul Kalam, Former President of India - Gnanakoothan, Tamil Poet - John Dalton, Chemist - Mouni, Fiction Writer - South Korea and North Korea, War.

📚Click here to buy Best Sellers in Books.

📚Click here to buy Law books.

👇Explore My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- About Author

- C.Thomas Noble.

📧:christothomasnoble@gmail.com

Comments